Tuesday, April 20, 2010

புலி வளர்ந்த குகை


எமது தேசியத் தலைவரின் தாய், தமிழ்நாட்டில் சிகிச்சைப் பெற வந்தபோது, மண்ணைக்கூட மிதிக்க விடாமல் விமானத்தோடு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். தமது தள்ளாத வயதில் கடந்த காலங்களில் சிங்கள பேரினவாத அரசு பாதுகாப்பு முகாமில் கடும் துயருக்குள்ளாக்கப்பட்டு, தமது வாழ்வை கழித்துக் கொண்டிருந்த அந்த வீர மங்கை, தமது கணவனும் தேசிய விடுதலைக்கான ஒரு சிறப்பு வாய்ந்த மாவீரனை அளித்தவருமான தேசியத் தலைவரின் தந்தையை இழந்தப்பின் நோய்வாய்ப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தார்.

அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, படுக்கையிலிருந்து எழ முடியாத கடும் துயருக்கு உள்ளாக்கப்பட்டு, தமிழ்நாட்டில் வந்து சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற எதிர்பார்ப்போடு தமிழ்நாட்டிற்குள் வந்தபோது, விமானத்திலிருந்து அவரை இறங்கக்கூட அனுமதிக்காத பெரும் தவறை இந்திய அரசு செய்திருக்கிறது. முறைப்படியாக, இந்தியாவில் வந்து சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்கு அவர் அனுமதி பெற்றும்கூட, தமிழ்நாட்டிற்குள் கால் வைக்க விடக்கூடாது என்று கங்கணம்கட்டி, தமிழ்நாடு அரசு அவரை தடுத்து அனுப்பியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கேவலமான அச்சமுள்ள அரசு இங்கே இயங்கிக் கொண்டிருப்பது தமிழர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவு தான்.

தமிழர்களின் உரிமைகள் நாளுக்கு நாள் பறிக்கப்பட்டுக் கொண்டு, தமிழர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், தமிழர்களின் இன அடையாளம் பொழுதுக்கு பொழுது அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் தமிழ் தேசிய தலைவரின் தாயாரை தமிழ் மண்ணிலே கால் பதிக்க விடாமல், திருப்பி அனுப்பிய தவறை தமிழக அரசு செய்து, தம் மீது காலமெல்லாம் அழிக்க முடியாத பெரும் பழியை சுமந்து கொண்டிருக்கிறது. அவர் என்ன தவறு செய்தார், இல்லையெனில் என்ன தவறு செய்யப்போகிறார்.

தள்ளாத வயது. சற்றேறக் குறைய 80 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்தத் தாய், தமிழ்நாட்டில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கும் போது, தமிழ்நாடு பெரும் கிளர்ச்சிக்கு உள்ளாகி விடுமா? அவரின் கால்பதிவு இந்த நாட்டை தேசிய அடையாளத்தை இழக்க செய்து விடுமா? அல்லது இன பற்றை வளர்த்துவிடுமா? அந்த அன்னையின் வருகையால் தமிழின உணர்வு மேலோங்கி தனி தமிழ்நாடு என்ற கோரிக்கை தாயக தமிழர்களுக்கு உற்சாக எண்ணமாய் உருமாறி விடுமா? என்னக் காரணத்திற்காக இந்த தமிழ் விரோத அரசுகள் இப்படிப்பட்ட ஒரு இழிச்செயலை செய்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அவர் முதியவர் என்கின்ற காரணத்தை சற்று ஒதுக்கிவிட்டு, ஒரு நோயாளி சிகிச்சைப் பெற வேண்டும் என்கின்ற மாந்த நேயத் தன்மைக்கூட நம் தமிழ்நாட்டில் இருந்து எப்படி வெளியேறியது என நினைக்கும்போது, நம்மைக் கண்டு நாமே வெட்கப்பட்டுக் கொள்ள வேண்டிய அவல நிலைக்கு, அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டோம். இந்த இனத்திற்காக, இந்த இனத்தின் மொழிக்காக தமது ஆற்றல் வாய்ந்த ஒரு மகவை பெற்றளித்த மாசில்லா தாய்க்கு நாம் பட்டுக் கம்பளம் விரித்தல்லவா வரவேற்பளித்திருக்க வேண்டும்.

அவர் தமிழ் சொத்தை காப்பாற்றிய தமிழ் தேசிய தலைவரின் தாய் அல்லவா? தமிழினத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாவீரனின் அன்னை அல்லவா? உலகே தமிழரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்து, தமிழர்களின் வாழ்வுக்கு வீரத்தை அணிகலனாய் பூட்டிவிட்ட அளப்பறிய மறவன், ஆற்றல் வாய்ந்த மாவீரன், நமது தேசிய தலைவருக்கு தாய் அல்லவா? அவரை இந்த நாடு எப்படி வரவேற்றிருக்க வேண்டும். நாமல்லவா ஓடி அவரை தோள்மீது சுமந்து சிகிச்சை அளித்திருக்க வேண்டும். நாமல்லவா ஓடிச் சென்று அவரை அழைத்து வந்து என் வீட்டில், உன் வீட்டில் என போட்டிப்போட்டு வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஆனால் அவரை திருப்பி அனுப்பியதின் மூலம் தமிழினம் மீண்டும் ஒருமுறை அவமானப்பட்டு தலைகுனிந்து நிற்கிறது. இந்திய தேசியத்தின் அடிமையாக தமிழினம் கட்டப்பட்டிருக்கிற காரணத்தால், கைக்கட்டி இந்த அவலத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்த இனம் உள்ளாகி இருக்கிறது. எந்த நிலையிலும் தமிழன் பிறருக்கு வாரி வழங்கும், பிறரின் துயர் போக்கும், பிறரின் பசிப்பிணி போக்கும் ஆற்றல் வாய்ந்தவனாக வாழ்ந்திருக்கிறானே? யானை தீம் பசி நீக்கிய இலக்கியங்களெல்லாம் இங்கிருந்து தானே தோன்றியது? அப்படிப்பட்ட ஒரு இனத்திற்கு, சிகிச்சை அளிக்க மாட்டேன் திரும்பிப்போ என்று சொல்லக்கூடிய கடின மனம் எங்கிருந்து வந்தது.

எதிரிக்குக்கூட துரோகம் செய்யாத தமிழினம், புறாவிற்கு பதிலாக தமது தொடைக்கறியை வைத்து எடைபோட்டுத்தந்த தமிழினம், நீதிக்காக தேர் காலில் தமது மகனை வைத்து நீதி காத்த தமிழினம் இவ்வளவுப் பெரிய அநீதியை எப்படி செய்ய முடிந்தது. இந்த தீங்கை எப்படி நடக்க அனுமதித்தது. இது இன்றல்ல, இன்னும் எத்தனைக் காலங்களானாலும் நமது அவமானமாகவே கருதப்படும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் நம் முகத்தைப் பார்த்து காரி உமிழ்வார்கள். நம் தேசிய தலைவரின் தாயைக்கூட பராமரிக்க முடியாத, கையாளாகாத ஒரு இனமாக தமிழினம் மாறிவிட்டதே!

கொத்துக்கொத்தாய் மாந்த இனம் கொல்லப்பட்ட போது, கைகட்டி, வாய் பொத்திய தமிழ் மரபு, இதோ அதன் தொடர்ச்சியாய் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்து திருப்பி அனுப்பி இருக்கிறது. என்ன நினைக்கிறார்கள். இந்திய தேசியம் பேசும் இவர்கள், நமக்கான ஒரு தேசம் இல்லாததல்லவா, நாம் இந்த இழிநிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். தேசிய தலைவரின் தாய் என்பவர், நமக்கெல்லாம் தாய் அல்லவா? நம் தாயை நம்மால் வைத்துக் காக்க முடியாமல் திருப்பி அனுப்பியது எந்த அளவிற்கு அவமானகரமான செயல். இதை எப்படி நாம் ஏற்றுக் கொள்வது? வாய்விட்டு ஓவென்று அழுவதை தவிர, நம்மால் வேறொன்றும் செய்ய முடியவில்லையே.

இலங்கையைப் போன்று தான் இங்கேயும் காக்கிச் சட்டைப் போட்டுக் கொண்டு, தமிழனாய் வாழ்ந்து, தமிழனையே தடுத்து நிறுத்தும் கடும் பணியை காவல்துறை என்கின்ற ஒரு இனம் செய்து வருகிறது. விமான நிலையத்திற்குச் சென்று வைகோவும், நெடுமாறனும் இந்த தமிழ் காவல்துறையினரால்தான் தடுத்த நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதோ, சட்டமீறல் நிகழ்ந்துவிடவில்லை. அவர்கள் சட்டப்படி விமான நிலையத்திற்குள் செல்லும் அனுமதி சீட்டைப் பெற்று, உள்ளே செல்வதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டு, கடும் வாக்குவாதத்திற்கு பின்னர்தான் அவர்களுக்கு உள்ளே செல்லவே அனுமதி கிடைத்திருக்கிறது.

இலங்கையிலே சிங்களன் தான் தமிழர்களை தடுத்தி நிறுத்தி வைக்கிறான். அவமானம், இங்கே தமிழனே தமிழனை தடுத்து நிறுத்துகிறான். தமிழனுக்கான உரிமைகள், தமிழனாலேயே தடுத்து நிறுத்தப்படுகிறது. தமிழர்களுக்கென்று உரிமைகள், தமிழ் மண்ணிலேயே மறுக்கப்படுகிறது. தமிழர்களுக்கான சிந்தனைகள் தமிழ் மண்ணிலேயே சிதைக்கப்படுகிறது. யாருக்காக இந்த நிலையை தமிழ்நாடு அரசு எடுத்தது என்பது புரியவில்லை. உலகெங்கும் அழைத்து செந்தமிழ் மாநாடு நடத்த இருக்கும் இந்த காலத்தில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று முழக்கத்தை முன்வைத்து வாழ்வு நடத்தும் தமிழ்நாட்டில், ஒரு தமிழ் தாய் சிகிச்சைப் பெற முடியாமல் திரும்பிப் போனது தமிழ் மரபுக்கு மட்டுமல்ல, தமிழ் மண்ணுக்கே தலைகுனிவு என்பதை எப்படி பதிவு செய்து வைப்பது.

நாளைய வரலாறு நம்மைப் பார்த்து கேளி பேசாதா? தமிழன் சென்று சொல்லிக் கொள்கிறாயே? தமிழ்நாட்டில் ஒரு தமிழ் தாய்க்கு சிகிச்சை அளிக்க மறுத்த பெரும் தவறை நீ எப்படி செய்தாய்? என்று கேட்கும் போது, நீயும் நானும் என்ன பதில் சொல்லப்போகிறோம். அய்யோ நாங்கள் வாழ்வதுதான் தமிழ்நாடு. எங்களை ஆள்வது தமிழர் அல்ல என்று வெட்கப்பட்டு, தலைகுனிந்து நிற்கப் போகின்றோமா? அல்லது எம்மை ஆள்வது தான் தமிழர் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஆனால் அவர்களின் மூளை அனைத்தும் டெல்லியிலே முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்போகிறோமா? என்னச் சொல்லி இந்த பெரும் பழியை நாம் தீர்க்கப் போகிறோம். என்னச் சொல்லி நமக்கு நாமே ஆறுதல் படுத்திக் கொள்ளப் போகிறோம். புரியவில்லை.

எப்படி யோசித்தாலும் இது பெரும் குற்றம்தான். இதை மறுத்துரைக்க முடியாது. ஐயா பழ.நெடுமாறன் கூறியதைப் போன்று, ஒருவேளை அந்த தாய்க்கு ஏதாவது தவறு நிகழுமேயானால், அதற்கு இந்தியாவின் பார்ப்பனிய அரசிற்கு தலைமை வகிக்கும் சோனியாவும், மன்மோகன்சிங்கும் எவ்வளவு பொறுப்பேற்க வேண்டுமோ, அதே அளவிற்கு தமிழ் பெயர் சொல்லி கடைவிரித்து, கோடிக்கோடியான பணம் குவித்த கருணாநிதியும், அவரின் அரசும் காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. அந்தத் தாய் வாழ்வது நமக்கு பெருமை அல்லவா? அந்தத் தாய் இயங்குவது நமக்கு பெருமை அல்லவா? அந்தத் தாய் தமிழ்மண்ணிலே சிகிச்சைப் பெறுவது நமக்கு பெருமை அல்லவா?

நமது தமிழினத்திற்குத்தானே அந்த தாய், தன் மகனை அர்ப்பணித்தார். தமது இனத்தின் விடியலுக்காகத்தானே அந்த சூரியனை அவர் படைத்தளித்தார். அவருக்கா நாம் மறுப்பது? எப்படி யோசித்தாலும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருகாலத்தில் தேசிய தலைவரின் படங்களைக் கண்டு அச்சமுற்ற அரசு, அதை எங்கும் பொறித்து வைக்கக் கூடாது என்று தடை செய்தது. தேசிய தலைவரின் பெயரை சொல்ல தடை விதித்தது. தேசிய தலைவரின் உருவங்கள் எங்கேயும் வரையப்படக்கூடாது என தடைவிதித்தது.

அதையெல்லாம் தாண்டி இப்போது அந்த உன்னத தலைவனின் தாயார் தமிழ்நாட்டிற்கு வரவே தடைவிதித்திருக்கிறது. புலியை தமது வயிற்றில் சுமந்த அந்தத் தாய், இன்று ஒன்றும் புரியாமல் திரும்பிப் போயிருக்கிறார். நாம் தமிழ் மறவர்களாய் வசனம் பேசிக் கொண்டு வாழப் போகிறோமா? இல்லை, இனியும் இந்த அநீதி தொடராமல் தடுக்கப்போகிறோமா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடமே விடுகிறோம்.
18 Apr 2010

இரவில் விளக்கு போடாதீர்: புற்று நோய் வரலாம்

இரவு நேரங்களில் திடீரென விளக்கை எரிய விடுபவர்களா நீங்கள்? அப்படியானால், இனி அவ்விதம் செய்ய வேண்டாம். இரவில் விளக் கெரிந்தால் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஓர் ஆய்வில், இரவு நேரங்களில் திடீரென விளக்கைப் போட்டால், அதனால் ஏற்படும் வெளிச்சத்தால் நம் உடலில் உள்ள செல்கள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாவதாகத் தெரிய வந்தது. இந்த அதிக அழுத்தம் புற்றுநோய்க்கு வழி வகுத்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அடர்த்தி மிகுந்த இரவில் திடீரென ஆனால் குறுகிய நேரத்துக்கு ‘பளீர்’ என்று விளக்கு எரிந்தால் கூட, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கண்டறிந்துள் ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்ற பென்ஷ்லோமோ என்பவர் கூறுகையில்,’இரவு நேரத்தில் செயற்கையாக ஏற்படுத்தப்படும் எவ்வித வெளிச்சமும் நமது உடலைப் பாதிக்கும். நேரத்துக்கு ஏற்றாற்போல் செயல்படும், நம் உடலின் கடிகாரம் அதனால் பாதிக்கப்படும். மிக மிகக் குறைந்த வெளிச்சம் கொண்ட இரவு விளக்குகள் இருந்தால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அவைதான் பாதுகாப்பானவை’ என்று தெரிவித்தார்

Monday, April 19, 2010

தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே.............

தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை!. திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது

கன்னடன் கன்னடனாக இருக்கும் போது, தெலுங்கன் தெலுங்கனாக இருக்கும் போது, மலையாளி மலையாளியாக இருக்கும் போது தமிழன் மட்டும் ஏன் திராவிடனாகத் திரிக்கப்பட வேண்டும் ?

முல்லைப் பெரியாறும், ஒகனேக்கல்லும், காவிரியும், பாலாறும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் முடக்கப்படும்போது, தமிழ்நாட்டின் வளங்கள் மட்டும் அவர்களுக்கு வேண்டுமா? இதுதான் இந்திய இறையாண்மையின் இலக்கணமா? அல்லது இந்தியக் கட்டப் பஞ்சாயத்தில் கிடைக்கும் ஞாயமா?

கடந்த 1956 ல் மொழி வழி மாநிலமாக இந்தியா பிரிக்கப்படும்போது மொழி இன அடிப்படையிலான உரிமைகளுக்கு அது அங்கீகாரம் அளித்தது!

ஆனால், மராட்டிய இன உணர்வுகளும், சீக்கிய இன உணர்வுகளும், கன்னடத், தெலுங்கு, மலையாள மற்றும் பிற இன உணர்வுகளும் உரிமைகளும் இந்தியத் துணைக்கண்டத்தில் மதிக்கப்படும்போது தமிழர்களின் உரிமையும் தாகமும் மட்டும் நசுக்கப்படுவது ஏன்?

அந்தந்த மாநிலங்களை அவரவர் ஆளும்போது, தமிழ்நாடு மட்டும் திறந்த வீடாகவும் வேலியில்லாக் காடாகவும் யார் வேண்டுமானாலும் ஆளலாம், ஆட்டம் போடலாம், ஏறி மேயலாம் என்ற நிலை இருப்பது ஏன்?

வந்தேறிகள் ஆளவும் ஏய்க்கவும அரட்டவும் உருட்டவும் அவர்கள் வைத்திருக்கிற கைத்தடிதான் திராவிடம் என்கிற பொய்ப்பூச்சு!

அடுத்து, பெரியார் என்கிற ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிற பேருரு!

தமிழர்கள் ஏய்க்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும், நசுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் காலாகாலமாக நடந்து வருகின்ற ஒன்றுதான். தாக்கினால் திருப்பி அடிப்பார்கள் என்கிற நிலை இருக்கும் போது தான் உலகில் அமைதி நிலவுகிறது. அல்லது ஏறி மேய்கிறார்கள்!

மலேசியாவிலோ, பர்மாவிலோ, ஈழத்திலோ, கர்நாடகத்திலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் தாய்த் தமிழகம் கொதித்து எழும் என்கிற நிலை இருந்தால் பத்தரைக் கோடித் தமிழனைத் தொட எந்தக் கொம்பனுக்கும் உலகில் துணிவிருந்திருக்காது.

மாறாக, பர்மாவின் சயாம் நகரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோதோ, கர்நாடகத்தில் தமிழர்கள் வெட்டித் துண்டாடப்பட்டபோதோ, மும்பையிலும் மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டபோதோ, பர்மாவிலிருந்து தமிழர் விரட்டப்பட்டபோதோ, ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொடுமையாகக் கொன்றொழிக்கப்பட்டபோதோ தாய்த் தமிழகத்தில் எதிர்ப்பில்லை, கொதிப்பில்லை, கொந்தளிப்பில்லை! காரணம் என்ன? திராவிடம் என்ற நச்சு போதைபோல் ஏறி சித்தம் சிதைந்து கிடக்கிறான் தமிழன்!

ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது!

ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது!

இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது.
மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது!
பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது!

இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப்பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது! உலகமே இப்படி இருக்கும்போது, அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும்போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்?


மூத்த இனம் இங்கே முடங்கிக் கிடப்பதே தன் அடையாளத்தை இழந்ததால்தான்! தமிழனைத் திராவிடனாக திரித்து சிதைத்துவிட்டார்கள்.

மீண்டும் இழந்த தமிழன் என்கிற அந்த அடையாளத்தை நாம் உணர்ந்து தக்க வைத்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை நாம் பாதுகாக்க இயலும். இதில் சமரசம் செய்து கொண்டு அரசியல் களத்தில் ஆராவாரம் செய்து யார் களம் இறங்கினாலும் அவர் தமிழினத்தின் இரண்டகராகவோ, எதிரியாகவோத்தான் இருப்பர்.

தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை! திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது

Monday, April 5, 2010

மருத்துவ செய்தி

உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌க்க ஆ‌ப்‌‌பி‌ள்

தினமு‌ம் ஒரு ஆ‌ப்‌பி‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்ல வே‌ண்டிய‌தி‌ல்லை எ‌ன்ற பழமொ‌ழி எ‌வ்வளவு‌க்கு எ‌வ்வளவு உ‌ண்மை எ‌ன்பதை தொட‌ர்‌ந்து நடைபெறு‌ம் ஆ‌ய்வுக‌ள் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன.
ஆ‌ப்‌பிளு‌க்கு ப‌ல்வேறு அ‌ரிய குண‌‌ங்க‌ள் இரு‌ப்பது ப‌ல்வேறு ஆ‌ய்வு‌கள் மூல‌ம் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. மது போதை அடிமைகளை மீட்கவும் கூட ஆ‌ப்‌பி‌ள் உதவு‌கிறதா‌ம்.

போதை‌ப் பழ‌க்க‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌விடுப‌ட்டு, நமது உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது.

இ‌ந்த பழ‌ங்க‌ள் எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்ட‌தி‌ல் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழமே. பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன.

கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங் களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மருத்துவ செய்தி

சூ‌ட்டுட‌ன் டீ குடி‌ப்போரு‌க்கு‌ம் பு‌ற்று நோ‌ய் வரு‌ம் வா‌ய்‌ப்பு அ‌திக‌ம்


பு‌ற்றுநோ‌ய் பர‌ம்பரை ‌ரீ‌தியாக வர‌க்கூடிய நோ‌ய் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது. அ‌தி‌ல்லாம‌ல் பலரு‌ம் த‌ங்களது தவறான பழ‌க்க வழ‌க்க‌ங்க‌‌ளினாலு‌ம் பு‌ற்றுநோ‌யை வரவழை‌த்து‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.
பா‌ன்பரா‌க், புகை‌யிலை போ‌ன்றவ‌ற்றை ப‌ய‌ன்படு‌த்துபவ‌ர்களு‌க்கு 1.1 மட‌ங்கு பு‌ற்றுநோ‌ய் வா‌ய்‌ப்பு அ‌திக‌ம்.

‌பீடி ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு ம‌ற்றவ‌ர்களை ‌விட 1.8 மட‌ங்கு பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்படு‌ம் ஆப‌த்து உ‌ள்ளது.

‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு இர‌ண்டு மட‌ங்கு பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்படு‌ம் அபாய‌ம் உ‌ள்ளது.

மது குடி‌ப்போரு‌க்கு பு‌ற்றுநோ‌ய் அபாய‌ம் 1.8 மட‌ங்காக உ‌ள்ளது.

அதே‌ப்போல அ‌திக சூ‌ட்டுட‌ன் டீ குடி‌ப்போரு‌க்கு‌ம் பு‌ற்று நோ‌ய் வரு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது. இது ம‌ற்றவ‌ர்களை ‌விட 4 மட‌ங்கு அ‌திக‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு நாட்டின் பட்ஜெட் தொகையை விட அதிகம் – தமிழகத்தில் கலாநிதி மாறன்


பெங்களூர்: பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது.

ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது.

உலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நாட்டுக்காரர் ஆகியுள்ளார்.

இந்தியாவில் உள்ள இந்த 49 பில்லியனர்களின் சொத்து மதிப்பையும் போர்ப்ஸ் தனித்தனியே கணக்கிட்டு கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த 49 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்களை சேர்த்து மதிப்பிட்டால் 222.1 பில்லியன் அமெரிக்க டாலர் என கணிக்கப்படுகிறது.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 43 ஆயிரத்து 870 கோடி!

இந்திய அரசாங்கத்தின் 2010-11ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியல்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ.8 லட்சத்து 94 ஆயிரத்து 769 என பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் வரி வருமானத்தை விட, 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் அதிகம்.

கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 251.4 பில்லியன் டாலர்.

இந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகையில் சுமார் 88.34 சதவீதம்.

அந்த 49 பெருங்கோடீஸ்வரர்கள்...!

உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருப்பவர் முகேஷ் அம்பானி. சொத்து மதிப்பு 2,900 கோடி டாலர்.

அம்பானிக்கு அடுத்தபடியாக உலக வரிசையில் 5ம் இடத்தை பிடித்து இந்தியாவில் இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ஆர்சிலர் மிட்டல் லட்சுமி மிட்டல் (2870 கோடி டாலர்).

இந்தியாவின் 3வது பெரிய பணக்காரர் விப்ரோ அசிம் பிரேம்ஜி (1700 கோடி டாலர்). அம்பானி சகோதரர்களில் ஒருவர் உலக வரிசையில் 4வதும், மற்றொருவர் இந்திய வரிசையில் 4வது இடத்தையும் பிடித்துவிட்டனர்.

1370 கோடி டாலருடன் உலக பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார் அனில் அம்பானி.

இவர்களைத் தொடர்ந்து எஸ்ஸார் குரூப்ஸ் ஷாஷி அண்ட் ரவி ரூஜா சகோதரர்கள், சாவித்திரி ஜிண்டால், டிஎல்எஃப் குஷால் பால் சிங், ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் பிர்லா, பாரதி ஏர்டெல்லின் சுனில் மிட்டல், வேதாந்தா அணில் அகர்வால் உள்ளனர்.

இந்தியாவில் 11வது இடத்தில் கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ்ஜும் அவரைத் தொடர்ந்து, கவுதம் அதானி, சன் பார்மாவின் திலிப் சங்க்வி, எச்சிஎல் ஷிவ் நாடார், ஜிஎம்ஆர் ஜி.எம்.ராவ், ரான்பாக்ஸியின் மால்விந்தர் அண்ட் ஷிவிந்தர் சிங் சகோதரர்கள், கோடக் மஹிந்தரா உதய் கோடக் உள்ளனர்.

தமிழகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் கலாநிதி மாறன்

தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார்.

44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 290 பில்லியன் என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. அதாவது சுமார் ரூ.13 ஆயிரத்து 630 கோடி.

தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம் கலாநிதி மாறனின் சொத்து. தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப்பிட்டால் (ரூ.74,858 கோடி) 19 சதவீதம்.

மாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதியின் இந்த சொத்து மதிப்பு.

சன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன் வசம் வைத்துள்ளார். சன் டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறார்.

அதோடு சன் டைரக்ட் டிடிஎச் சேவைகளை மலேசிய பெருங்கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனின் அஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இதில் 45 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சன் பிக்சர்ஸ் மூலம் மெகா பட்ஜெட் படங்களையும் எடுத்து வருகிறார். இவை அல்லாமல் பல்வேறு தொழிலகங்களில் முதலீடு செய்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்துத் துறையில் கால் பதிக்க உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா (ஜீ என்டெர்டெயின்மென்ட்), பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின், 'லேண்ட்மார்க்' மிக்கி ஜக்தியானி, டோரென்ட் பவர் நிறுவனத்தின் சுதிர் சமீர் மேத்தா சகோதரர்கள் போன்றவர்கள் உள்ளனர்.

பெருகும் பணக்காரர்கள்...

இந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவிக்கிறது.

அந்நிறுவனம் நடத்திய ஆய்வில், 2000ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்திய மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தினசரி 50 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.

பணக்காரர்கள் தாங்கள் சிரமப்பட்டு சேர்த்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க தயாராக இருப்பதில்லை.

இயற்கை பேரிடர் போன்ற சிக்கலான தருணங்களில் சக மக்களுக்கு உதவுவதில் இந்தியாவில், அரசாங்கங்கள் தான் முன்னணியில் உள்ளன.

இதுபோன்ற சமயங்களில் மத்திய, மாநில அரசுகள் மூலம் 65 சதவீதத்துக்கும் மேல் நிதி திரட்டப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மூலம் எஞ்சிய தொகை திரட்டப்படுகிறது. மிகவும் சொற்ப அளவுக்கே பணக்காரர்கள் மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் தனிப்பட்ட பங்களிப்பு இருப்பதாக பெயின் அண்ட் கோ நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற பேரிடர் நிவாரண நிதிகளில் தனி நபர்கள், கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் 75 சதவீத நிதி திரட்டப்படுகிறது.

Tuesday, March 16, 2010

விட்டதைப் பிடிக்க துடிக்கும் பாமக-பாடம் கற்குமா அதிமுக?



சென்னை: ஒரே ஒரு தோல்விதான். ஆனாலும் இமயமலையே கவிழ்ந்து போனதைப் போன்ற ஒரு பெரும் கவலையுடன், இழந்த செல்வாக்கை மீண்டும் பறிக்கும் நோக்கில், மின்னல் வேகத்தில் செயல்பட்டு படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பாமகவின் வைராக்கியம் அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

பென்னாகரம் இடைத் தேர்தல் ஆளுங்கட்சிக்கு இன்னொரு இடைத் தேர்தல். எதிர்க்கட்சியான அதிமுக வோ, தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிகுறியே தென்படாமல் சோம்பிப் போய்க் கிடக்கிறது. ஆனால் அனைவரது கவனத்தையும் தற்போது வெகுவாக ஈர்த்திருப்பது பாமகதான்.
கிட்டத்தட்ட ஆளுங்கட்சியின் ரேஞ்சுக்கு படு வேகமாக செயல்பட்டு வருவது பாமக மட்டுமே.

பாமகவின் இந்த சுறுசுறுப்பான, மின்னல் வேக பணிகள் வியக்க வைத்துள்ளது. இழந்த பெருமையை தட்டி எழுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது. இதையடுத்து எப்படி வந்தது இந்தத் தோல்வி, எங்கே போனார்கள் நமக்காக வாக்களித்து வந்த வன்னியர்கள் என்ற கேள்விகளுடன் தொடர் ஆய்வுக் கூட்டங்கள், ஊர் ஊராகப் போய் மக்களின் கருத்தை அறிவது என தீவிரமாக இறங்கினார் ராமதாஸ்.

இந் நிலையில் பென்னாகரம் இடைத் தேர்தல் வந்துவிட தனது இழந்த செல்வாக்கை நிலைநாட்ட படு தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ராமதாஸ்.

பென்னாகரம் தொகுதியின் முக்கிய வாக்கு வங்கியே வன்னியர்கள்தான். எனவே இங்கு வெற்றி பெற்றால் தான் அடுத்த தேர்தலில் திமுகவோ அல்லது அதிமுகவோ கூட்டணியில் சேர்ப்பார்கள் இல்லாவிட்டால், அதோ கதி தான் என்பதை ராமதாஸ் தெளிவாகவே உணர்ந்துள்ளார்.

பாமகவின் எதிர்காலமே இந்த இடைத் தேர்தல் முடிவைப் பொறுத்தது தான் என்பதால் அக் கட்சியினரும் படு வேகமாக உள்ளனர்.
வெற்றி அல்லது குறைந்தபட்சம் 2வது இடத்தையாவது பிடித்தாக வேண்டும் என்ற இலக்குடன் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் ராமதாஸ் தலைமையில் பாமகவினர்.

பாமக முதன் முதலாக 1991ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அப்போது பென்னாகரத்தில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சுப்ரமணியம், 32 சதவீத வாக்குகளையும் அள்ளி 2வது இடத்தைப் பிடித்தார்.

1996ல் நடந்த தேர்தலிலும் பாமக தனித்தே போட்டியிட்டது. அப்போது பென்னாகரத்தில் போட்டியிட்ட ஜி.கே.மணி அபார வெற்றி பெற்றார். 2001ல் நடந்த தேர்தலி்ல கூட்டணி வைத்து போட்டியிட்டது பாமக. அப்போதும் மணிதான் வென்றார்.

2006ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமகவுக்கு பென்னாகரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் மணி மேட்டூருக்கு மாறினார். இத்தொகுதியில் பெரியண்ணன் போட்டியிட்டு வென்றார். இவர் பாமகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகுதியின் சுமார் 2 லட்சம் வாக்காளர்களில், ​ஒவ்வொரு வாக்காளரின் ஆதரவையும் தங்கள் கட்சிக்குத் திருப்ப வேண்டும் என்ற திட்டத்தோடு,​​ தேர்தல் வியூகம் அமைத்து,​​ பாமக​ செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு 100 வாக்காளருக்கும் ஒரு களப் பணியாளர் வீதம்,​​ 2,000 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இரவு பகலாக தொகுதியை சுற்றி வருகின்றனர்.

அப்பணியாளர்களை ஒருங்கிணைக்க 30 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.​ ஒவ்வொரு மையத்துக்கும் அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் இப்போதைய எம்.எல்.ஏக்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவை தவிர,​​ தொகுதி முழுவதையும் சுற்றி வரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள்,​​ மொத்தமுள்ள 48 பஞ்சாயத்துகளில்,​​ குறிப்பிட்ட பஞ்சாயத்துகளை தங்கள் சொந்த பொறுப்பில் எடுத்துக் கொண்டு தேர்தல் பணி செய்கின்றனர்.​ குறிப்பாக,​​ டாக்டர் ராமதாஸே, தனக்கென 5 பஞ்சாயத்துகளை எடுத்துக் கொண்டுள்ளாராம்.

அதேபோல, அன்புமணி ராமதாஸ்,​​ ஜி.கே.​ மணி,​​ காடுவெட்டி குரு,​​ வேல்முருகன் உள்ளிட்டோரும் தலா 5 பஞ்சாயத்துகளை எடுத்துக் கொண்டு தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தேர்தல் பணிக்குழுத் தலைவராக செயல்படும் எம்.எல்.ஏ வேல்முருகன் கூறுகையில், எங்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடந்த 3 மாதங்களாக தொகுதியின் அனைத்து கிராமங்கள்,​​ அனைத்து வீதிகளுக்கும் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார்.​

மேலும் எங்கள் களப்பணியாளர்கள் மூலம்,​​ ஒவ்வொரு வாக்காளரையும் இதுவரை 30 தடவைக்கு மேல் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளோம்.​ வன்னிய மக்களுக்கு ராமதாஸ் செய்த சாதனைகள் மற்றும் கடந்த மக்களவைத் தேர்தல் தோல்வியால் சந்தித்த வேதனைகள் ஆகியவற்றை நினைவுபடுத்தி வருகிறோம்.​ எனவே,​​ திமுகவின் பணபலத்தையும் மீறி,​​ நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்கிறார்.

பாமகவின் இந்த துடிப்பான பணிகளைப் பார்க்கும்போது மறுபக்கம் அதிமுகவின் சவக் களையான முகம் தான் நினைவுக்கு வருகிறது.

பாமகவுக்கு கிடைத்தது ஒரு தோல்வி. ஆனால் அதிமுகவோ கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் தொடர்ந்து இரு மக்களவைத் தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தலிலும், அனைத்து இடைத் தேர்தல்களிலும் தோல்வியைத் தான் சந்தித்து வருகிறது. ஆனாலும் அந்தக் கட்சி அதைத் துடைக்கும் வகையிலோ, தோல்விக்கு என்ன காரணம் என்பதை அறிவதிலோ ஒரு கவனமும் செலுத்தியதாகத் தெரியவில்லை.

கட்சியினரை உற்சாகப்படுத்தி, தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் எந்த முயற்சியிலும் ஜெயலலிதா ஈடுபடவில்லை. அதை விட கொடுமையாக, பென்னாகரத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

பாமகவினரின் துடிப்பையும், தவிப்பையும் பார்த்தாவது அதிமுக பாடம் கற்குமா என்று தெரியவில்லை.